மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் நலன்புரி சங்கம் ஏற்பாடு செய்த வருடாந்த ஒளி விழா 2019 டிசம்பர் 10 ஆம் தேதி நடைபெற்றது.
இந் நிகழ்வு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் திரு.வ.வாசுதேவன் தலைமையில் நடைபெற்றது. விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக கத்தோலிக்க மற்றும் மெதடிஸ்ட் அருட்தந்தையினர் கலந்து சிறப்பித்தனர்.




மண்முனை வடக்கு பிரதேச செயலகமும் மக்கள் வங்கியும் இணைந்து ஏற்பாடுசெய்த சிறுவர்களுக்கான துவிச்சக்கர வண்டி சவாரி October 1st 2019 நடைபெற்றது.
மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரதேச செயலாளர் வ.வாசுதேவன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளின் மாணவ,மாணவிகள் கலந்துகொண்டனர்.
அதனைத்தொடர்ந்து மண்முனை வடக்கு பிரதேச செயலக மண்டபத்தில் பிரதேச செயலாளர் வ.வாசுதேவன் தலைமையில் சிறுவர்களின் கலைநிகழ்வு, நாடகம்,விவாதம் போன்ற நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வின் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயக்குமார் கலந்து சிறப்பித்தார்.இந்நிகழ்வில் கலந்து கொண்ட சிறுவர்கள் பரிசு வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.




மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் 5 கிராம உத்தியோகத்தர்கள் பிரிவில் முதற்கட்டமாக ஆரம்பிக்கப்பட்ட SMART சமூக வட்டத்தின் தொடக்க விழாவானது பிரதசே செயலாளர் திரு.மாணிக்கவாசகர் தயாபரன் தலைமையில் இடம்பெற்றது.
ஸ்மார்ட் சமூக வட்டம் (SSC) முன்முயற்சியானது, சமூக விழிப்புணர்வை ஊக்குவிப்பதற்கும், இலங்கையின் பல்வேறு பிரதேசங்களில் வேலை வாய்ப்புகள் மற்றும் சிக்கலான பிரச்சினைகளை அறிந்து கொள்வதற்கும் வழி வகுத்துள்ளது.
அரசாங்கத்தின் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கும் நல்ல ஆட்சிக்கு பங்களிப்பதற்கும் குடிமக்களுக்கு மிகவும் தேவையான வசதிகளை இந்த முயற்சியை வழங்கும்.
இவ் நிகழ்ச்சி திட்டத்தின் நோக்கங்கள்
சமூக ஊடகங்கள் மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அறிவு, அனுபவம் வாய்ந்த மற்றும் பதிலளிக்கக்கூடிய ஊழியர்களுடன் SMART சமூக வட்டாரங்களின் தீவு முழுவதிலுமான வலைப்பின்னலை உருவாக்குதல்.
குறிப்பிட்ட நோக்கங்கள்
• குடிமக்கள் மத்தியில் ஒருங்கிணைந்த ஊக்குவிப்பை ஊக்குவிப்பதற்கும் ஒருங்கிணைப்பதற்கும், பயனர் நட்பு சார்ந்த தகவல் மற்றும் சேவைகளை வழங்கவும்.
• சமூக ஊடகங்கள் மூலம் மாற்றத்தை உருவாக்க முயற்சிக்கும் தொழிலதிபர்கள், நிர்வாகிகள், ஆர்வலர்கள், கல்வியாளர்கள் மற்றும் கண்டுபிடிப்பாளர்களிடையே நெட்வொர்க்குகளை உருவாக்குவது.
• Citizen Journalism ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் நிறுவ.
• தொழில் மற்றும் உலக விஞ்ஞான மையங்களுடன் இணைக்க
• உள்ளூர் மற்றும் சர்வதேச அளவில் தேவைப்படும் குடிமகன் பத்திரிகையாளர்களை உருவாக்குதல்.





Bicycle ride was headed by Divisional Secretary Manikavasagar Thayaparan to reduce air pollution on the World Environment Day. This was from Batticaloa main bus stand up to the Divisional Secretariat.


மேற்படி வேலைத்திட்டமானது சமுர்த்தி பயனாளிகளின் குடும்பங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 5 இளைஞர்களுக்கு பயிற்சியானது Hightec Lanka International Vocational and Technical Training Institiute (Pvt) Ltd நிறுவனத்தால் 2018-09-27 தொடக்கம் 2018-11-30 ஆம் திகதி வரை நடைபெற்றது.
பயிற்சியினை பூர்த்தி செய்த இளைஞர்களுக்கான சான்றிதழ் பிரதேச செயலாளர் திரு. மாணிக்கவாசகர் தயாபரன் அவர்களினால் 10-12-208 ஆம் திகதி பிரதேச செயலகத்தில் சமுர்த்தி தலைமை முகாமையாளரின் பங்கு பற்றுதலுடன் வழங்கப்பட்டது.











