
மட்டக்களப்பு மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தில் பாரம்பரிய உணவு மற்றும் காளான் பெறுமதி சேர் உணவு பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழில்நுட்ப மாற்றிட்டு பயிற்சி நெறி இன்று இடம்பெற்றது. இதில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பங்குபற்றியுள்ளனர். பிரதேச செயலாளர் எம்.தயபரன் வழிகாட்டலின் கீழ் இந்த பயிற்சி நடைபெற்றது.



மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏழாவது எட்டாவது வீட்டுத்திட்டமாக மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தி;ற்குட்பட்ட கொக்குவில் பகுதியில் விழுதுநகர்,சுபீட்சம் நகர் ஆகிய வீட்டுத்திட்டங்களே இவ்வாறு திறந்துவைக்கப்பட்டன.
வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜீத் பிரேமதாச தலைமையில் இந்த வீட்டுத்திட்டம் திறந்துவைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் தேசிய ஒருமைப்பாடுகள்,நல்லிணக்க மற்றும் அரச கருமமொழிகள் அமைச்சின் பிரதியமைச்சர் அலிசாகீர் மௌலானா,பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன்,மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார்,மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன்,மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் எம்.தயாபரன், தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் மாவட்ட முகாமையாளர் கே.ஜெகநாதன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.











