Batticaloa District
Manmunai North Division
R.THUSHYANTHAN - Silver Medal
 
spo1 spo2

சமூகசேவைகள் திணைக்களத்தால் (மத்திய அரசு) நாடாத்தப்பட்ட சுயசக்தி அபிமானி நிகழ்வில் 2021ஆண்டிற்கான மாவட்ட மட்டத்தில் எமது பிரதேச செயலகத்திற்கு சிறந்த மாற்றுத் திறனாளிகளுக்கான சிறுவர் இல்லத்திற்கான 1ம், 2ம் இடங்களும் , மாற்றுத் திறனாளிகளுக்கான அமைப்பு சார்பாக 3ம் இடத்திற்கான சான்றிதழ்கள் இன்று அரசாங்க அதிபரினால் வழங்கி வைக்கப்பட்டது.

d1

d2

d4

d7

 

Social Security Board Pension Scheme Awareness Programme was held on November 9th 2022 at Amirthakali Sri Siththivinayagar School
 
s1
"ஒவ்வொருவரையும் கவனித்துக்கொள்வோம்" எனும் தொனிப்பொருளிற்கு அமைவாக பொருளாதார நெருக்கடியால்
பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள், வயோதிபர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கான உதவித்திட்டம் வழங்கும் நிகழ்வு இன்று (16) திகதி மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
தற்பொழுது நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடியான சூழலில் குறிப்பாக மட்டக்களப்பு
மாவட்டத்திலுள்ள தெரிவு செய்யப்பட்ட 8 பிரதேச செயலக பிரிவுகளிலுள்ள இதுவரை அரச கொடுப்பனவிற்காக காத்திருப்பு பட்டியலிலுள்ள மாற்றுத்திறனாளிகள், வயோதிபர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் பயன்பெறும் வகையிலான உதவித்திட்டமானது CBM (christian blind mission) நிறுவனத்தின் நிதிப்பங்களிப்புடன் இந் நிறுவனத்தின் பங்களாளர் நிறுவனங்களான CAMID, PPCC மற்றும் YMCA ஊடாக மாவட்ட செயலகத்துடன் இணைந்து 3000 பயனாளிகளுக்காக தலா 5000/= கொடுப்பனவானது மண்முனை வடக்கு, ஏறாவூர் பற்று, ஏறாவூர் நகரம், கோறளைப்பற்று மத்தி, கோரளைப்பற்று மேற்கு, மண்முனை மேற்கு, காத்தான்குடி மற்றும் போரதீவு பற்று பிரதேச செயலக பிரிவுகளிலுள்ள தெரிவு செய்யப்பட்ட 3000 மாற்றுத்திறனாளிகள், வயோதிபர்களுக்கு மற்றும்
அவர்களது குடும்பங்களுக்கு வழங்கி வைக்கப்படவுள்ளது.
இதன் ஆரம்ப நிகழ்வாக மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 30 மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் தலைமையில் இவர்களுக்கான காசுக்கட்டளைகள் இன்று மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் வைக்கு வழங்கி வைக்கப்பட்டள்ளது.
இந் நிகழ்வுக்கு அதிதிகளாக CBM நிறுவனத்தின் இலங்கைக்கான பிரதிநிதி வாணிசுரேந்திரநாதன், மண்முனை வடக்கு உதவி பிரதேச செயலாளர் திருமதி.லட்சண்யா பிரசந்தன், CAMID திட்டப்பணிப்பாளர் கே.காண்டீபன், PPCC நிறுவன இயக்குனர் அருட்தந்தை போல் சற்குணநாயகம் அடிகளார் மற்றும் YMCA செயலாளர் பற்றிக், மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் சா.அருள்மொழி, மண்முனை வடக்கு பிரதேச செயலக சமூக சேவைகள் உத்தியோகத்தர் ராஜ்மோகன், மண்முனை வடக்கு பிரதேச செயலக கிராம உத்தியோகத்தர்களுக்கான நிருவாக உத்தியோகத்தர் கே.ராஜன் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், எதிர்நீச்சல் மாற்றுத்திறனாளிகள் அமைப்பின்
பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
 
s1
 
s2
 
s3
 
s4
 
s5
 
s6
 
s7
 
s8
 
s9
 
s10
 
s11
கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் கீழ் இயங்கிவரும் மாவட்ட சமூக சேவை அலுவலகத்திற்கான காணியானது 1.11.2022 இன்று மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திரு.வ.வாசுதேவன் அவர்களால் சமூக சேவைகள் திணைக்கள மாகாண பணிப்பாளர் திரு.ஏ.ஜி.தெய்வேந்திரன் அவர்களிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மண்முனை வடக்கு உதவி பிரதேச செயலாளர்களான திருமதி பி.லக்ஷனியா, ஜனாப்.M.R. சியாகஹீல்ஹக். மற்றும் தலைமையக சமூக சேவை உத்தியோகத்தர், மட்டக்களப்பு மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர், மண்முனை வடக்கு சமூக சேவை உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
 
l1

News & Events

23
May2025
அலுவலக உத்தியோகத்தர்களுக்கான இலவச மருத்துவ முகாம்-2025

அலுவலக உத்தியோகத்தர்களுக்கான இலவச மருத்துவ முகாம்-2025

பிரதேச செயலக  உத்தியோகத்தர்களுக்கான இலவச மருத்துவ முகாம் 22.05.2025 ...

16
May2025
அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கான பாடத்திட்ட  பயிற்சிப் பட்டறை -2025

அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கான பாடத்திட்ட பயிற்சிப் பட்டறை -2025

மண்முனை வடக்கு பிரதேச செயலக அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கான...

Scroll To Top