மண்முனை வடக்கு பிரதேச செயலக அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கான பாடத்திட்ட பயிற்சிப்பட்டறை பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் அவர்களின் வழிகாட்டலில் 15.05.2025 பிரதேச செயலக டேபா மண்டபத்தில் நடாத்தப்பட்டது.


இந்நிகழ்வின் வளவாளராக அம்பாறை மாவட்ட செயலக இந்து கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.கு.ஜெயராஜ் அவர்கள் கலந்து கொண்டார்.இந் நிகழ்வை மண்முனை வடக்கு பிரதேச செயலகஉதவிப் பிரதேச செயலாளர் திருமதி.சுபா சுதாகரன், இந்து கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் கலாசார பிரிவு உத்தியோகத்தர்கள் ஆகியோர் ஒருங்கிணைத்திருந்தனர்.

இந் நிகழ்வில் அறநெறிக்கல்வியின் முக்கியத்துவம், அதனை மாணவர்களை ஈர்க்கக் கூடியவாறு செயற்படுத்தல், ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் இடையூறுகள், தீர்க்கும் வழிவகைகள் என்பன ஆராயப்பட்டன. குறிப்பாக இந்து கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் வடிவமைக்கப்பட்டுள்ள பாடத்திட்டத்தை செயற்படுத்துதல் தொடர்பாக விசேட அக்கறை எடுத்துக் கொள்ளப்பட்டது.இந் நிகழ்வில் கலந்து கொண்ட அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கு அநெறி பாடநூல்கள் வழங்கி வைக்கப்பட்டது.











