மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் 2025ம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பித்தல் நிகழ்வு 01.01.2025 அன்று Clean Sri Lanka எனும் தேசிய நிகழ்ச்சி திட்டத்துடன் இணைந்ததான கருப்பொருளில் பிரதேச செயலக வளாகத்தில் பிரதேச செயலாளர் வ.வாசுதேவன் தலைமையில் இடம்பெற்றது.



இதன்போது பால் காய்ச்சும் சம்பிரதாயத்துடன் நிகழ்ச்சி ஆரம்பமாகி அதனை தொடர்ந்து தேசிய கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டது. மேலும் நாட்டுக்காக உயிர் நித்தவர்களை நினைவுகூரும் முகமாக மௌன அஞ்சலி செலுத்தப்பட்டு அதனை தொடர்ந்து அனைத்து உத்தியோகத்தர்களும் சேவை உறுதியுரையும் செய்துகொண்டனர்.



அதன் தொடர்ச்சியாக சனாதிபதி செயலகத்திலிருந்து ஒளிபரப்பப்பட்ட Clean Sri Lanka நிகழ்ச்சித்திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் தேசிய நிகழ்விலும் பிரதேச செயலக அனைத்து உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.













