மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தினால் 03.04.2024 அன்று புதுநகரில் பிரதேச செயலாளர் திரு.வ.வாசுதேவன் அவர்களின் தலைமையில் நடமாடும் சேவை இடம்பெற்றது.


இதில் அசுவெஸ்ம, பிறப்பு இறப்பு பதிவு, தேசிய அடையாள அட்டை புகைப்படம் எடுத்தல், ஆயுள்வேத வைத்திய சிகிச்சை மற்றும் சமூக பராமரிப்பு நிலையத்தினால் வழங்கப்படுகின்ற சேவைகள் அத்துடன் இணைந்த Family Plan Association நிறுவனத்தினால் பெண் நோயியல் தொடர்பான சேவையும் வழங்கப்பட்டது.


இதில் உதவி பிரதேச செயலாளர், கிராம நிருவாக உத்தியோகத்தர், சுகாதார வைத்திய அதிகாரி, ஆயுள்வேத வைத்திய அதிகாரி மற்றும் ஏனைய அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் திருப்பெருந்துறை, திமிலைதீவு, சேத்துக்குடா, வீச்சுகல்முனை, ஆகிய பிரிவுகளில் இருந்து பொதுமக்களும் கலந்து கொண்டனர்.












