"பொலித்தீன், பிளாஸ்டிக் பாவனையை குறைப்போம் சுற்றுச்சூழலை பாதுகாப்போம்" என்றதொனிப்பொருளில் விழிப்புணர்வு வீதி நாடகமொன்று 20.03.2023 திகதி மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டது.

po1

மக்கள் மத்தியில் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பாவனையால் மக்களுக்கும் சூழலுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புக்களை எடுத்துக்காட்டும் வகையிலான விழிப்புணர்வு வீதி நாடகம் ஒன்றினைமட்டக்களப்பு வை.எம்.சீ.ஏ நிறுவனத்தினர் சி.பி.எம் நிறுவனத்தின நிதி அனுசரணையுடன் மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவில் கொக்குவில் கிராமத்தில் அரங்கேற்றியிருந்தனர்.

po2

இந்நிகழ்விற்கு வை.எம்.சீ.ஏ நிறுவனத்தின் திட்ட உத்தியோகத்தர் செ.பிறின்ஸ் அலெக்ஸ்தலைமை தாங்கி நடாத்திய நிகழ்விற்கு பிரதம அதிதியாக மண்முனை வடக்கு பிரதேச செயலக சமுகசேவை உத்தியோகத்தர் ராஜ்மோகன், பிரதேச செயலக சுற்றுச்சூழல் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.பிரசாந்தி, மாற்றத்திறனாளிஅமைப்பினர், வை.எம.சீ.ஏ உத்தியோகத்தர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

po3

இவ்வீதி நாடகத்தினை கதிரவன் நாடக குழுவினருடன் மாற்றுத்திறனாளிகள் இணைந்து வழங்கியிருந்ததுடன் இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டன.இவ்வீதி நாடகம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

po5

po6

po7

po9

 

News & Events

23
மே2025
அலுவலக உத்தியோகத்தர்களுக்கான இலவச மருத்துவ முகாம்-2025

அலுவலக உத்தியோகத்தர்களுக்கான இலவச மருத்துவ முகாம்-2025

பிரதேச செயலக  உத்தியோகத்தர்களுக்கான இலவச மருத்துவ முகாம் 22.05.2025 ...

16
மே2025
அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கான பாடத்திட்ட  பயிற்சிப் பட்டறை -2025

அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கான பாடத்திட்ட பயிற்சிப் பட்டறை -2025

மண்முனை வடக்கு பிரதேச செயலக அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கான...

குடியுரிமை சாசனம்

Scroll To Top