சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மண்முனை வடக்கு பிரதேச செயலக சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட மருத்துவ முகாம் 09.03.2023 அன்று பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் உதவி பிரதேச செயலாளர் தலைமையில் இடம்பெற்றது.

இதில் கணக்காளர், நிர்வாக உத்தியோகத்தர், நிர்வாக கிராம உத்தியோகத்தர் மற்றும் சக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.


மேலும் பெண்களுக்கான உடல் ஆரோக்கியம் தொடர்பான பரிசோதனை மற்றும் ஆலோசனை வழிகாட்டல்கள் என்பன சுகாதார சேவை நிலைய வைத்தியர்கள், தாதியர் மற்றும் குடும்ப நல உத்தியோகத்தர்களால் மேற்கொள்ளப்பட்டது.

இதற்கு Family Planning Association of Sri Lanka என்ற நிறுவனம் அனுசரணை வழங்கியிருந்தது.













