17.11.2024 மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் ஏற்பாட்டில் மண்முனை வடக்கு பிரதேச இளைஞர் கழக சம்மேளன தலைவி செல்வி.சுஜீவா அவர்களின் தலைமையில் கல்லடி கடற்கரை மற்றும் திருச்செந்தூர் கோவில் வரையிலான பகுதியில் பிளாஸ்டிக் பாவனையை குறைப்போம் என்ற தொனிப்பொருளில் சிரமதானப்பணி ஒன்று இடம்பெற்றது.


இதன் போது மட்டக்களப்பு மாவட்ட உதவிப்பணிப்பாளர் திருமதி.நிஷாந்தினி அருள்மொழி அவர்களும் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் சேவை உத்தியோகத்தர் திரு.சசிகுமார் மற்றும் மாவட்ட இளைஞர் சேவை உத்தியோகத்தர் மற்றும் மண்முனை வடக்கு பிரதேச இளைஞர் சேவை உத்தியோகத்தர் திரு.தயாசீலன் அவர்களும் இதில் கலந்து கொண்டனர்.


அத்தோடு இந்நிகழ்விற்கான பங்களிப்பினை ஜனாதக்ஷன் அமைப்பானது வழங்கியிருந்தது, அவ் அமைப்பின் கள உத்தியோகத்தர் பெலிஸ்ட்டா மதுவந்தி இயற்கைமொழி அமைப்பின் ஸ்தாபகர் திருமதி காயத்ரி அவர்களும் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திலிருந்து சுற்று சூழலியல் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி பிரசாந்தினி அவர்களும் கலந்துகொண்டனர்.


மண்முனை வடக்கு பிரதேச சம்மேளன உறுப்பினர்களும் கலந்து கொண்டதோடு மண்முனை வடக்கிலிருந்து மொத்தமாக 45க்கு மேற்பட்ட இளைஞர் யுவதிகள் கலந்து தங்களது பங்களிப்பினை வழங்கியிருந்தனர்.
சமூக சேவைகள் திணைக்களத்தினால் நடாத்தபட்ட மாற்றுதிறனாளிகளுக்கான சுயசக்தி அபிமானி நிகழ்ச்சி திட்டத்தில் எமது பிர தேச செயலகத்தை சேர்ந்த கிரிஸ்ரிதாஸ் அவர்கள் தேசிய மட்டத்தில் தெரிவாகி 07.11.2024 அன்று இசுறுபாய, பத்தரமுல்லயில் கெளரவிப்பு நடைபெற்றது.



Internation Children's Day and Elder's Day was held on 01.10.2024 at Divisional Secretariat, Manmunai North, Batticaloa.










மண்முனை வடக்கு பிரதேச செயலக வாணி விழா நிகழ்வானது 10.10.2024 அன்று பிரதேச செயலாளர் வ.வாசுதேவன் அவர்களின் தலைமையில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பங்களிப்புடன்இடம்பெற்றது.இந்நிகழ்வில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் மாணவ மாணவிகளது கலை நிகழ்வுகளும் அதனை தொடர்ந்து அன்னதான நிகழ்வும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.








To mark World Environment Day, a tree planting program was conducted under the theme "Land Restoration Drought Resilience," organized by Manmunai North Divisional Secretariat on June 5, 2024.















