பிரதேச செயலக மட்ட உத்தியோகத்தர்களுக்கான ஒரு நாள் பயிற்சி நெறியானது 17.04.2025 உதவி பிரதேச செயலாளர் திருமதி சுபா சதாகரன் அவர்களின் தலைமையில் பிரதேச செயலக டேபா மண்டபத்தில் இடம்பெற்றது.பிரதேச செயலக மட்ட உத்தியோகத்தர்களுக்கான ஒரு நாள் பயிற்சி நெறியானது 17.04.2025 இன்று உதவி பிரதேச செயலாளர் திருமதி சுபா சதாகரன் அவர்களின் தலைமையில் பிரதேச செயலக டேபா மண்டபத்தில் இடம்பெற்றது.



இந்நிகழ்வு காலை 9.00 மணி முதல் பி.ப 4.00 மணி வரை இடம்பெற்றது.இந்நிகழ்வின் வளவாளர்களாக திரு.நிர்மலராஜ் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் மாவட்ட செயலகம் மட்டக்களப்பு அவர்களும் திருமதி.சி.கொரேரா அபிவிருத்தி இணைப்பாளர் மண்முனை வடக்கு பிரதேச செயலகம் அவர்களும் கலந்து கொண்டனர்.இந்நிகழ்வில் கிராம உத்தியோகத்தர்கள், திட்டமிடல் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் அலுவலக, வெளிக்கள உத்தியோகத்தர்கள் பங்குபற்றினார்கள்.











