மண்முனை வடக்கு பிரதேச செயலக ஸ்ரீ ராஜகணபதி ஆலய சங்காபிஷேக நிகழ்வானது 01.04.2025 அன்று சதுர்த்தி நன்னாளில் அலுவலக உத்தியோகத்தர்களின் பங்குபற்றுதலுடன் பிரதேச செயலாளர் திருமதி.சிவப்பிரியா வில்வரத்னம் அவர்களின் ஒழுங்கமைப்பில் சிறப்பாக இடம்பெற்றது.












இந் நிகழ்வு மட்டக்களப்பு ஆனைப்பந்தி சித்தி விக்னேஸ்வரர் ஆலயத்திலிருந்து பிரதேச செயலக ராஜகணபதி ஆலயம் வரை உத்தியோகத்தர்களின் பாற்குட பவனியுடன் ஆரம்பமானது. விஜயசக்தியின் நடனாஞ்சலி, கல்லடி ஸ்ரீ சித்தி விநாயகர் அறநெறி பாடசாலை மாணவியின் கதாப்பிரசங்கம், பஜனை போன்ற கலை நிகழ்வுகளால் பிரார்த்தனை மேற்கொள்ளப்பட்டது.அன்னதானத்துடன் உற்சவம் சிறப்பாக நிறைவுற்றது.











