அரச உத்தியோகத்தர்களுக்கான ஆற்றல் மேம்பாட்டிற்கான செயற்பாட்டு பயிற்சியானது மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் அவர்களின் வழிகாட்டலில் இன்று(19.03.2025) பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்றது.


இந்நிகழ்வின் வளவாளர்களாக மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் ப.ராஜதிலகன் அவர்களும் காத்தான்குடி பிரதேச செயலக கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி சிந்து உஷா அவர்களும் கலந்து கொண்டனர்.இந்நிகழ்வில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள் பங்கேற்றனர்.
இந் நிகழ்வு காலை 9.00 மணி தொடக்கம் மாலை 4.00 மணி வரை இடம்பெற்றது.மிகச் சிறந்த பயிற்சிநெறியாக உத்தியோகத்தர்களால் பின்னூட்டல் வழங்கப்பட்டது.


















