இந்நிகழ்வானது பிரதேச செயலாளரின் தலைமை மற்றும் வழிகாட்டுதலுடன் உதவி பிரதேச செயலாளரின் நேரடி கண்காணிப்புடன் SDO, EDO, கிராம உத்தியோகத்தர்கள், கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் மற்றும் பொது மக்களின் ஒத்துழைப்புடன் இடம்பெற்றது.
மேலும் இந்த சிரமதான நிகழ்வின் போது தற்போது பாவனையில் இல்லாத அரச கட்டிடங்கள், காணி, பாடசாலை ஆகிய இடங்களில் காணப்பட்ட கழிவுகள் அகற்றப்பட்டதுடன் அலுவலகங்களில் காணப்பட்ட நீர், மலசல கூடம், மின்சாரம், வேலி மற்றும் உட்புற சூழலுக்கான் குறைபாடுகள் இனம் காணப்பட்டு உரிய முறையில் தீர்க்கப்பட்டதுடன் சுற்றுப்புறச்சூழலில் பூமரங்கள் மற்றும் பயன்தரும் மரங்களும் நடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
















