”நற்பண்பு மிக்க அழகிய உலகம் ஒன்றினை கட்டியெழுப்புவோம் ‘ எனும் தொனிப்பொருளில் மண்முனை வடக்கு பிரதேச செயலகம் நடத்தும் பிரதேச இலக்கிய விழா நேற்று மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றது.
பிரதேச இலக்கிய விழாவுக்கான அதிதிகள் வரவேற்புடன் மங்கள விளகேற்றப்பட்டு ஆரம்பமான பிரதேச இலக்கிய விழா நிகழ்வில் கலாசார மத்திய நிலைய மாணவர்களின் வரவேற்பு நடனம், மாணவர்களின் கதைகூறல் மற்றும் அதிதிகள் சிறப்புரைகள் இடம்பெற்றது.
2022ஆம் ஆண்டுக்கான பிரதேச இலக்கிய விழாவினை முன்னிட்டு பாடசாலை மாணவர்கள் ,எழுத்தாளர்கள்,கலைஞர்கள் இடையில் நடாத்தப்பட்ட இலக்கிய போட்டிகளில் வெற்றி பெற்ற பாடசாலை மாணவர்கள்,கலைஞர்கள்,எழுத்தாளர்களுக்கும் பரிசில்களும்,சான்றிதழ்களும் வழங்கப்பட்டது .
மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.வாசுதேவன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சனி ஸ்ரீகாந்த் ,சிறப்பு அதிதிகளாக வலயக்கல்விப்பணிப்பாளர் கே.சுஜாதா குலேந்திரகுமார் ,உதவி மாவட்ட செயலாளர் எ.நவேஸ்வரன் ,பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் எ.சுதர்சன் பிரதம கணக்காளர்,கிராம நிர்வாக உத்தியோகத்தர்,மண்முன வடக்கு பிரதேச செயலக பிரிவு அலுவலக உத்தியோகத்தர்கள், பாடசாலை ஆசிரியர்கள் , மாணவர்கள், பெறோர்கள் கலந்துகொண்டனர்.

மண்முனை வடக்கு பிரதேச செயலக ‘மட்டு முயற்சியான்மை’ பிரதேச மட்ட கண்காட்சியும் விற்பனையும் இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது.
மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வீ.வாசுதேவன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்விற்கு பிரதம விருந்தினராக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் கலந்து சிறப்பித்திருந்தார். நிகழ்வில் அதிதிகள் வரவேற்கப்பட்டதனைத் தொடர்ந்து விற்பனைக் கண்காட்சி கூடம் அதிதிகளினால் திறந்துவைக்கப்பட்டது.
இதன்போது காட்சிப்படுத்தப்பட்டிருந்த உள்ளூர் உற்பத்தியாளர்களின் உற்பத்திப் பொருட்களைப் பார்வையிட்ட அரசாங்க அதிபர் உற்பத்தியாளர்களின் முயற்சியை பாராட்டியதுடன் அவர்களுக்கு அரசாங்கத்தினால் பெற்றுக்கொடுக்கக் கூடிய உதவிகளை பெற்றுக்கொடுக்குமாறு உரிய திணைக்களங்களின் அதிகாரிகளை பணித்திருந்தார்.
இக்காலகட்டத்தில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடியை குறைக்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கண்காட்சியில் கைத்தறி உற்பத்திகள் கைப்பணிப்பொருட்கள்இ விவசாய உற்பத்திகள், சேதனைப் பசளை உற்பத்திகள் மற்றும் உணவு உற்பத்திப் பொருட்கள் அடங்கலாக பெருமளவான உற்பத்திப் பொருட்களின் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிகழ்வில் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் உதவிப் பிரதேச செயலாளர்கள்,கணக்காளர், உதவித்திட்டமிடல் பணிப்பாளர்கள,சுயதொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவின் உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள், கிராமிய அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் உள்ளூர் முயற்சியாளர்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டிருந்தனர்.
மண்முனை வடக்கு பிரதேச செயலகமும் சிறு தொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவும் இணைந்து வருடாந்தம் ‘மட்டு முயற்சியான்மை’ கண்காட்சி விற்பனையை நடாத்தி வருகின்றமை குறிப்பிடதத்க்கது.

School Awareness Program regarding Aarassawa and Surakuma Pension Schemes on 24th Sep 2022 at Bt/Sivananda National School Batticaloa







புலம்பெயர் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு கிடைக்கும் புலமைப்பரிசில் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு























