மண்முனை வடக்கு பிரதேச செயலக வாணி விழா நிகழ்வானது 04.10.2022 செவ்வாய்க்கிழமை பிரதேச செயலாளரின் தலைமையில் பிரதேச செயலக Derba மண்டபத்தில் இடம்பெற்றது.













உணவு கையிருப்பு பாதுகாப்பு மற்றும் போஷாக்கினை உறுதிப்படுத்துவதற்காக கிராமிய பொருளாதார புத்துயிரூட்டல் கேந்திர நிலையங்களை வலுவூட்டுவதற்கான பல்வகை துறைசார் பிரதேச ஒருங்கிணைந்த பொறிமுறைக்கான கலந்துரையாடல் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றது ,
அனைத்து பிரஜைகளுக்கும் நாட்டில் நிலவும் எந்தவொரு நிலைமையிழும் சுறுசுறுப்பான ஆரோக்கியமான உணவிணை நியாயமான விலையில் பெற்றுக் கொள்வதற்கான இயலுமை மற்றும் நாட்டில் எந்தவொரு பிரஜையும் உணவு இல்லாமையினால் பட்டினியில் இருக்க கூடாது என்ற அரசாங்கத்தின் உணவு கையிருப்பு பாதுகாப்பு நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் இக் கலந்துரையாடல் நடைபெற்றது.
மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி .வாசுதேவன் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் எம் ஆர் சுயாவுல் ஹக் , பிரதிதிட்டமிடல் பணிப்பாளர் ஏ .சுதர்சன் , பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 48 கிராம சேயையாளர் பிரிவுகளில் செயல்படும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் , கிராம உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் , குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர் ,விவசாய ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி உதவியாளர்கள் , பாடசாலை அதிபர்கள் ,அரச சார்பற்ற அமைப்புக்களின் பிரதிநிதிகள் ,சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கிராமிய பொருளாதார புத்துயிரூட்டல் கேந்திர நிலையங்களை வலுவூட்டுவது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது
எந்தவொரு பிள்ளையும் போஷாக்கின்மை நிலைமைக்கு உள்ளாக்கக்கூடாது .எனும் திட்டத்தின் தேசிய உணவு கையிருப்பு பாதுகாப்பு மற்றும் போஷாக்கிற்கான சபை தலைவராக ஜனாதிபதியும் , தேசிய ஒருங்கிணைந்த பொறிமுறை தலைவர் சனாதிப்பதியின் செயலாளர் ,தொழிநுட்ப ஆலோசனை குழு தலைவர் பிரதம செயலாளர், ஒருங்கிணைந்த பொறிமுறை தலைவர் மாகாண ஆளுநர் ஆகியோரின் தலைமையின் கீழ் முன்னெடுக்கப்படும் அரசின் உணவு கையிருப்பு பாதுகாப்பு நிகழ்ச்சி திட்டத்தின் மாவட்ட மட்டம் மற்றும் பிரதேச செயலக மட்டத்தில் முன்னெக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தொழில் வழிகாட்டல் மற்றும் 13 ம் ஆண்டு கல்வி திட்டம் தொடர்பான விழிப்பூட்டல் கருத்தரங்கு 2022.09.29 அன்று பிள்ளையாரடி நல்லையா வித்தியாலயம் மற்றும் புதூர் விக்னேஸ்வரா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் நடைபெற்றது.

















