அரச உத்தியோகத்தர்களுக்கான மத்தியஸ்தம் தொடர்பான விழிப்புணர்வு பயிற்சி நெறியானது 29.04.2025 பிரதேச செயலாளர் திருமதி.சிவப்பிரியா வில்வரத்னம் அவர்களின் வழிகாட்டலில் உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.சுபா சுதாகரன் அவர்களின் தலைமையில் பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வு காலை 9.00 மணி முதல் பி.ப 1.30 மணி வரை இடம்பெற்றது.இந்நிகழ்வின் வளவாளர்களாக திரு M.I.M அஜூன் மாவட்ட மத்தியஸ்த இணைப்பாளர் அவர்களும் திருமதி ஜீவிதா நதீசன் மத்தியஸ்த அபிவிருத்தி உத்தியோகத்தர் கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலகம் அவர்களும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வின் இணைப்பாளராக மத்தியஸ்த அபிவிருத்திஉத்தியோகத்தர் திருமதி.பிறின்சி நிலோஜினி மண்முனை வடக்கு பிரதேச செயலகம் அவர்கள் செயற்பட்டார். இந்நிகழ்வில் கிராம உத்தியோகத்தர்கள் பங்குபற்றினார்கள்.














