சர்வதேச நாடகதினத்தை முன்னிட்டு அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான நாடகப் பயிற்சி நெறியானது மண்முனை வடக்கு பிரதேச செயலகமும் கலாசார அலுவல்கள் திணைக்களமும் இணைந்து பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் அவர்களின் வழிகாட்டலில் 27.03.2025 பிரதேச செயலக மண்டபத்தில் நடாத்தப்பட்டது.





இந்நிகழ்வின் வளவாளராக சுவாமி விபுலாநந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் தற்காலிக உதவி விரிவுரையாளர் திரு.ரவிச்சந்திரன் விநோகாந்தன் அவர்கள் கலந்து கொண்டார்.இந்நிகழ்வில் மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட அறநெறிப் பாடசாலை மாணவர்கள் பங்கேற்றனர்.இந் நிகழ்வு காலை 9.00 மணி தொடக்க ம் மாலை 12.00 மணி வரை இடம்பெற்றது.











