
மண்முனை வடக்குப் பிரதேச செயலக பதவிநிலை அணியினர் நலன்புரிச் சங்க ஏற்பாட்டில் ஒளிவிழா நிகழ்வானது 07.12.2023 அன்று பிரதேச செயலக டேபா மண்டபத்தில் பிரதேச செயலாளர் வ.வாசுதேவன் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில், வணபிதா அன்னதாஸ் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார் மேலும் வணபிதா ராஜரெட்ணம் பாலன் யேசுவின் பிறப்புத் தொடர்பில் சிறப்புரையாற்றினார்.
இதன்போது மண்முனை வடக்குப் பிரதேச செயலகப் பிரிவில் வசிக்கும் தெரிவு செய்யப்பட்ட வறுமைக் கோட்டின் கீழ் வாழும் 30 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன. அத்தோடு இப்பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டது.
































