மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் சித்திரைப் புதுவருட பாரம்பரிய விளையாட்டு விழாவானது 26.04.2023 திகதி பாட்டாளிபுரம் மைதானத்திலும் 27.04.2023 ம் திகதி வெபர் மைதானத்திலும் பிரதேச செயலாளர் வ.வாசுதேவன் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் அதிதியாக மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் V.ஈஸ்வரன் அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார்.இந்நிகழ்வின் ஆரம்ப நிகழ்வாக தேசிய கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டதைய் தொடர்ந்து. உதவி பிரதேச செயலாளர்கள், கணக்காளர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் தலைமையில் 4 அணிகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் இடம்பெற்றன.
இதில் எல்லே, கிரிக்கட், மாவுக்குள் காசு எடுத்தல், தேசிக்காய் ஓட்டம், தேங்காய் துருவுதல்,முட்டி உடைத்தல், சாக்கு ஓட்டம், வேக நடை ஆண்கள், பெண்கள், பலூன் உடைத்தல், கயிறு இழுத்தல், போத்தலில் நீர் நிரப்புதல், சங்கீதக் கதிரை, கலப்பு அஞ்சல் ஓட்டம் போன்ற விளையாட்டு போட்டிகள் இடம்பெற்றன.
இவ்விளையாட்டு போட்டியில் உதவி பிரதேச செயலாளர்கள், கணக்காளர், திட்டமிடல் பணிப்பாளர்கள், நிருவாக உத்தியோகத்தர், நிருவாக உத்தியோகத்தர் கிராம சேவை உள்ளிட்ட சக அலுவலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.இதில் கணக்காளர் தலைமையிலான MN Warriors அணியானது முதலிடமும் உதவி பிரதேச செயலாளர்கள் தலைமையிலான Brave Heart, MN Eagles முறையே இரண்டாம் மூன்றாம் இடத்தையும் பெற்றுக் கொண்டது.






























