இன்று (17.10.2022) மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக டேபா (Derba) மாநாட்டு மண்டபத்தில் ஜப்பான் மொழி கற்கை தொடர்பான செயலமர்வு நடைபெற்றது.
மண்முனை வடக்கு பிரதேசத்திலுள்ள 48 கிராமசேவக பிரிவிலுள்ள சமூர்த்தி பயனாளிகளில் இருந்து குறித்த திட்டத்திற்கான பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிகழ்வின் வளவாளராக மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திரு.வ.வாசுதேவன் கலந்து கொண்டார்.
மேலும் இந்நிகழ்வின் மட்டக்களப்பு மாவட்ட சமூர்த்தி கணக்காளர், மண்முனை வடக்கு பிரதேச செயலக சமூர்த்தி தலைமை முகாமையாளர், மாவட்ட சிரேஷ்ட முகாமையாளர் திரு.மனோகிதராஜ், வெளிநாட்டு வேலைவாய்ப்பு திணைக்கள முகாமையாளர் போன்றோரும் கலந்து கொண்டுள்ளனர். சமூர்த்தி உத்தியோகத்தர்களின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
















